1ரித்1ராணாய ஸாதூ4னாம் வினாஶாய ச1 து3ஷ்க்1ருதா1ம் |

4ர்மஸம்ஸ்தா21னார்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ||8||

பரித்ராணாய——பாதுகாக்க; ஸாதூனாம்——நீதிமான்; வினாஶாய——அழிப்பதற்கு; ச——மற்றும்; துஷ்க்ரிதாம்——துர்மார்கர்களை; தர்ம—--நித்திய மதம்; ஸன்ஸ்தாபன-அர்த்தாய——மீண்டும் நிறுவ; ஸம்பவாமி—நான் தோன்றுகிறேன்; யுகே யுகே——ஒவ்வொரு யுகத்திலும்

అనువాదం

BG 4.8: ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும், தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும், நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.

వ్యాఖ్యానం

கடவுள் உலகில் அவதரிக்கிறார் என்று முந்தைய வசனத்தில் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது, அவ்வாறு செய்வதற்கான கீழே கூறியுள்ள மூன்று காரணங்களைக் கூறுகிறார்: 1) பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்க. 2) பக்தியுள்ளவர்களைக் காக்க. 3) தர்மத்தை நிலைநாட்ட. இருப்பினும், இந்த மூன்று விஷயங்களையும் நாம் கூர்ந்து கவனித்தால், மூன்று காரணங்களில் எதுவுமே மிகவும் உறுதியானதாகத் தெரியவில்லை:

நீதிமான்களைப் பாதுகாப்பது: கடவுள் தனது பக்தர்களின் இதயங்களில் அமர்ந்து எப்போதும் அவர்களை உள்ளே இருந்து பாதுகாக்கிறார். இதற்காக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

பழி பாவங்களுக்கு அஞ்சாதவரை அழித்தொழிக்க: எல்லாவற்றிலும் வல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பழி பாவங்களுக்கு அஞ்சாத வரை அழிக்க விரும்பும் நொடியில் அவர்களை கொல்ல முடியும். இதை நிறைவேற்ற அவர் ஏன் அவதாரம் எடுக்க வேண்டும்?

தர்மத்தை நிலைநாட்ட: வேதங்களில் தர்மம் நித்தியமாக விவரிக்கப்பட்டுள்ளது. கடவுள் ஒரு துறவி மூலம் அதை மீண்டும் நிறுவ முடியும்; இதை நிறைவேற்ற, அவர் தனது தனிப்பட்ட வடிவில் அவதரிக்க வேண்டிய அவசியமில்லை.

பிறகு இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதைப் புரிந்துகொள்ள சற்று ஆழமாக ஆராய்வோம்.

ஆன்மா ஈடுபடக்கூடிய மிகப்பெரிய தர்மம் கடவுள் பக்தி. அதைத்தான் கடவுள் அவதாரம் எடுத்து பலப்படுத்துகிறார். கடவுள் உலகில் அவதரிக்கும் போது, ​​அவர் தனது தெய்வீக வடிவங்கள், பெயர்கள், நற்பண்புகள், பொழுது போக்குகள், இருப்பிடங்கள். மற்றும் கூட்டாளிகளை வெளிப்படுத்துகிறார். இது ஆத்மாக்களுக்கு பக்திக்கு எளிதான அடிப்படையை வழங்குகிறது. கடவுளின் உருவமற்ற அம்சத்தை வணங்குவது மிகவும் கடினம், ஏனென்றால் மனதிற்கு கவனம் செலுத்துவதற்கும் அதனுடன் இணைவதற்கும் ஒரு வடிவம் தேவை. மறுபுறம், கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் மீதான பக்தி மக்கள் புரிந்துகொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிதானது மற்றும் ஈடுபடுவதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததிலிருந்து, பல கோடி ஆன்மாக்கள் அவரது தெய்வீக லீலைகளை (பொழுதுபோக்குகளை) தங்கள் பக்தியின் அடிப்படையாக ஆக்கி, தங்கள் மனதை எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் தூய்மைப்படுத்தியுள்ளனர். அதேபோல், ராமாயணம் எண்ணற்ற நூற்றாண்டுகளாக ஆத்மாக்களுக்கு பக்திக்கான பிரபலமான அடிப்படையை வழங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய தேசிய தொலைக்காட்சியில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பத் தொடங்கியதும், இந்தியாவின் அனைத்து தெருக்களும் காலியாகிவிடும். ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ ராமரின் பொழுது போக்குகள் மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், ஸ்ரீ ராமரின்ன் லீலைகளை தொலைக்காட்சியில் காண்பதற்காக மக்கள் வெகுவாக கவரப்பட்டனர் ராமரின் வம்சாவளியானது வரலாற்றில் கோடிக்கணக்கான ஆன்மாக்களுக்கு பக்திக்கான அடிப்படையை எவ்வாறு வழங்கியது என்பதை இது வெளிப்படுத்துகிறது. ராமாயணம் கூறுகிறது:

ராம் ஏக1 தா1பஸ தி1ய தா1ரி, நாம கோடி12ல கு1மதி1 ஶுதா4ரி

‘அவரது வம்சாவளி காலத்தில், ராமர் ஒரு அஹல்யாவுக்கு மட்டுமே உதவினார் (கௌதம முனிவரின் மனைவி, அஹல்யாவை கல்லில் இருந்து ராமர் விடுவித்தார்). இருப்பினும், அன்றிலிருந்து, "ராம்" என்ற தெய்வீக நாமத்தை உச்சரிப்பதன் மூலம், கோடிக்கணக்கான தாழ்ந்த ஆத்மாக்கள் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளனர்.’ எனவே, இந்த வசனத்தின் ஆழமான புரிதல்:

தர்மத்தை நிலைநாட்டுவதற்கு: ஆன்மாக்களுக்குத் தம் பெயர்கள், வடிவங்கள், பொழுது போக்குகள், நற்பண்புகள், இருப்பிடங்கள் மற்றும் கூட்டாளிகளை வழங்குவதன் மூலம் பக்தி என்ற தர்மத்தை நிலைநாட்ட கடவுள் அவதரிக்கிறார், அதன் உதவியுடன் அவர்கள் பக்தியில் ஈடுபட்டு மனதைத் தூய்மைப்படுத்தலாம்.

பழி பாவத்திற்கு அஞ்சாத வரை அழித்தொழிக்க: கடவுளுடன் சேர்ந்து அவரது தெய்வீக பொழுதுபோக்குகளை எளிதாக்க உதவுவதற்காக சில சுயத்தை உணர்ந்த துறவிகள் குற்றம் செய்தவர்கள் போல் நடிக்கிறார்கள். உதாரணமாக, ராவணனும், கும்பகர்ணனும் கடவுளின் தெய்வீக வசிப்பிடத்திலிருந்து வந்த ஜயன் மற்றும் விஜயன் ராட்சதர்கள் போல் நடித்து பகவான் ஸ்ரீ ராமருடன் போரிட்டனர். கடவுள் அவர்களை கொன்று விட்டு அவர்களை அவரின் முதல் இருப்பிடமான தனது தெய்வீக இடத்திற்கு அனுப்பினார்.

நீதிமான்களைப் பாதுகாக்க: பல ஆன்மாக்கள் தங்கள் ஆன்மிகப் பயிற்சி (ஸாதனா ) மூலம் கடவுளை நேருக்கு நேர் சந்திக்கத் தகுதி பெறுவதற்குப் போதுமான அளவு உயர்ந்துள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணர் உலகில் அவதரித்தபோது அத்தகைய தகுதியுள்ளவர்கள் கடவுளின் தெய்வீக பொழுதுபோக்குகளில் பங்கேற்கும் முதல் வாய்ப்பைப் பெற்றனர். சில கோ3பி1கள் (ஸ்ரீ கிருஷ்ணர் தனது பொழுது போக்குகளை வெளிப்படுத்திய பிருந்தாவனத்தின் மாடு மேய்க்கும் பெண்கள்) ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில் உதவுவதற்காக தெய்வீக இருப்பிடத்திலிருந்து இறங்கிய ஆன்மாக்கள். மற்ற கோபியர்கள், கடவுளைச் சந்திக்கவும், சேவை செய்யவும், அவருடைய லீலைகளில் பங்கேற்கவும் முதல் வாய்ப்பைப் பெற்ற ஆன்மாக்களாக இருந்தனர். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் உலகில் அவதரித்தபோது, ​​அத்தகைய தகுதியுள்ள ஆன்மாக்கள் கடவுளின் பொழுது போக்குகளில் நேரடியாகப் பங்கேற்பதன் மூலம் தங்கள் பக்தியை முழுமையாக்கும் வாய்ப்பை பெற்றனர். இதுதான் வசனத்தின் ஆழமான பொருள். எவ்வாறாயினும், யாரேனும் ஒருவர் வசனத்தை இன்னும் சொல்லர்த்தமாக அல்லது உருவகமாக அறிய விரும்பினால் அது தவறல்ல.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency